தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகராக வம் வருபவர் தான் பகத் பாசில்.அந்த வகையில் தெலுங்கில் ல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருப்பார்.
அதே போல தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் வெயிட்டான கேரக்டரில் நடித்து தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டார்
இப்படங்கள் இரண்டுமே இவரை சிறந்த நடிகராக அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில், கேரள ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.இந்நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் நடித்துள்ள மலையன்குஞ்சு படம் இம்மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் பிரமோஷன் பணிகளில் தற்போது பகத் பாசில் ஈடுபட்டுள்ளார்.
அவரே இந்தப் படத்தை தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.இதனிடையே அவர் தன்னுடைய அடுத்த படத்தில் மீண்டும் இணையவுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் அவரது மிரட்டலான நடிப்பையடுத்து மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பகத்தின் மனைவி நஸ்ரியா, மீண்டும் லோகேஷ் -கமல் கூட்டணி எப்போது நடக்கும் என்று கேட்கிறார். வீடியோ கால் மூலம் இதற்கு பதிலளிக்கும் லோகேஷ், மீண்டும் அனைவரும் இணையவுள்ளது குறித்து உறுதிப்படுத்துகிறார்.இதைக் கேட்ட பகத் பாசில் மற்றும் நஸ்ரியா மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விக்ரம் படத்தில் நடித்த குட்டிக் குழந்தையை கமல் இப்படித் தான் நடிக்க வைத்தாரா?- சூப்பர் அட்டேட்டாக இருக்கே
- போதைப் பொருளை எடுத்துக் கொண்டால் தான் இசையமைக்கவே முடியும்- இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!