• Sep 20 2024

முதன் முறையாக பிரபல மாஸ் நடிகருக்கு வில்லனாகும் கமல்ஹாசன்- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகின்றார். மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தில் அவருக்கு ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றார். இதனை அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிராஜெக்ட் கே என்ற படத்தில் தற்போது பிரபாஸ் நடித்து வருகிறார். 

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது.மேலும் படத்தில் நடிகர் அமிதாப் பச்சனும் திஷா பட்டானியும் முக்கியமான கேரக்டர்களில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வைஜெயந்தி மூவிஸ் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வைஜெயந்தி மூவிஸ் தற்போது 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையடுத்து, பொன்விழா ஆண்டு படைப்பாக பிரம்மாண்டமான இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.


 இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜனவரி 12ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில்வ ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்ஷனாக இந்தப் படம் மிரட்டலான திரைக்கதையும் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட மேக்கிங் காட்சிகளின் வீடியோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

இந்திய அளவில் இதுவரை இல்லாதவகையில் மிகவும் பிரம்மாண்டமாக பிராஜெக்ட் கே படம் உருவாகி வருகிறது. மேலும் உலகத் தரத்திலான படைப்பாக இந்தப் படத்தை நாக் அஸ்வின் உருவாக்கி வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் சுவாரஸ்யமான அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகர் பிரபாசிற்கு வில்லனாக உலகநாயகன் கமல்ஹாசன் இணையவுள்ளதாகவும் இதற்காக அவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு மிகவும் அதிக அளவில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்காக வெறுமனே 20 நாட்கள் மட்டுமே கமல் கால்ஷீட் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். தொழில்நுட்ப ரீதியில் மிகவும் கவனத்துடன் இந்தப் படத்தை நாக் அஸ்வின் உருவாக்கிவரும் சூழலில், தெலுங்கு திரையுலகின் மிகவும் சிறப்பான படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement