ராஜ ராஜ சோழனை பற்றி கல்கியினால் புனையப்பட்ட நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'.
இப்படத்தின் முதல் பாகமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தோடு இப்படம் வசூலிலும் 500 கோடிக்கு மேல் பெற்று சாதனை படைத்தது வருகின்றது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் கமல்ஹாசன், ரேவதி, குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து பாரதிராஜா கூறுகையில் "எம்.ஜி.ஆர் என்னை அழைத்து நீ பொன்னியின் செல்வன் படத்தை எடு என்று சொல்லிக் கூறினார். அதில் வந்தியதேவனாக கமல்ஹாசனையும், குந்தவையாக ஸ்ரீதேவியையும் நடிக்க வைக்க சொன்னார்" என தெரிவித்திருக்கின்றார். இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
Listen News!