சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதைத்தொடர்ந்து கமலின் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதையடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர் முருகதாஸின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.
ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் படம் கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்ட படமாக இருக்கும் என்பதால் இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிக முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் மாவீரன் படத்தில் கமலஹாசனை உள்ள கொண்டு வருவதற்கான வேலைப்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன .அதாவது கமல் இந்த படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழும்பி வருகின்றது.ஆனால் கமல் நடிக்கவில்லை கமலின் குரல் நடிக்கிறதாம். இப்படத்தில் சிவகார்த்திகேயனின் கமலின் மைண்ட் வாய்ஸ் கேக்குமாம் இவர் சீக்கிரமா சுதாகரித்து அதன்படி கேப்பாராம் ,இந்த மாதிரியான காட்சிகள் இருக்காம் என சொல்லப்படுகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!