பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர். ரஜினிகாந்த் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான நடிகர்களை அஜித் விக்ரம் சூர்யா விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார்.
இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆரிய பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற பாலாஜி நடித்திருந்தார்.
நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் வீடு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது
இதனை தெடர்ந்து பிரபலங்கள் பலரும் மயிலசாமிக்கு அஞ்சலி செலுத்திவரும் நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால் நடிகர் கமல்ஹாசன் மட்டும நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லையாம். ஷுட்டிங்கில் மயில்சாமி கொண்டு வரும் மீன் குழம்பை விருப்பிச் சாப்பிடுபவர் கமல். அத்தோடு மயில்சாமியின் நெருங்கிய நண்பராகவும் இருக்கின்றார்.
இருப்பினும் நண்பனின் இறப்பிற்கு கமல் போகாதது ரசிகர்களை கலக்கமடையச் செய்துள்ளது. மேலும் மயில்சாமியின் வீட்என் இருகே தான் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்கும் நடந்து வருகின்றது. இருப்பினும் அவர் ஏன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்பது மட்டும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!