• Sep 20 2024

எதுவும் சொல்லாமல் திடீரென முத்தம் கொடுத்த கமல்ஹாசன்- படக்குழுவை திட்டிய பிரபல நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். வித்தியாசமான வேறுபட்ட கதாப்பாத்திரங்களை எடுத்து நடிப்பதால் இவருக்கு உலகநாயகன் என்ற பட்டமும் உள்ளது. அத்தோடு இவர் இதுவரை 4தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் கமல்ஹாசன் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது கடலோர கவிதைகள் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ரேகா. இப்படத்தில் கதாநாயகனான சத்தியராஜ் நடித்திருந்தார்.

அத்தோடு இப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ரேகா பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். மேலும் கமல்ஹாசனுடன் புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள் இந்த திரைப்படத்தில் இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி இருந்தது.

அதன்படி அந்த காட்சியில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள் அப்பொழுது நடிகை ரேகாவுக்கு படக்குழு எதுவும் கூறாமல் ஒரு முத்தக் காட்சியை வைத்துள்ளார்கள்.

அதாவது கமல் மற்றும் ரேகா தற்கொலை செய்வதற்கு முன் இருவரும் மாறி மாறி பேசிக்கொள்வார்கள் அப்பொழுது திடீரென கமல் ரேகாவை இறுக்கி அணைத்தபடி உதட்டில் முத்தத்தை கொடுத்து விடுவார் அவர் ரொம்ப நேரமாகியும் முத்தம் கொடுப்பதை நிறுத்த வில்லையாம்.

இதனால் ரேகா என்னிடம் எதுவுமே கூறாமல் இப்படி ஒரு காட்சியை வைத்து விட்டீர்களே என படப்பிடிப்பு முடிந்ததும் அழுது கொண்டே இருந்துள்ளார். இது எங்கள் வீட்டிற்கு தெரிந்தால் என்ன ஆவது என்னை என்ன நினைப்பார்கள் என கூறி அதற்கு அழுததாக சமீபத்தில் ஓர் பேட்டியில் கூறியிருந்தார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement