1976-ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா.
பின்னர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களின் மனங்களில் குடி கொண்டார்.
மேலும் இவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருப்பதோடு, 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் எண்ணற்ற இனிமையான பாடல்களை கொடுத்த வித்துவான் என்றும் கூறலாம்.
ஆனால் திரைத்துறையில் இத்தனை ஆண்டுகாலமாக பயணித்து வருகின்ற இவர் இன்றும் பிஸியாக படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் 80வது பிறந்த நாளை காணும் இசைஞானி இளையராஜாவுக்கு திரை பிரபலங்களும் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்" என மனமார வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.
திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய… pic.twitter.com/0csPLNnE7P
Listen News!