தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஜி. மாரிமுத்து சென்னையில் மாரடைப்பால் காலமானார். அதாவது நேற்றைய தினம் ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு திரையுலகில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இவரின் மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசனும் தனது இரங்கலினைத் தெரிவித்துள்ளார். அதாவது "தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறி மிகவும் துக்கத்துடன் பதிவிட்டு இருக்கின்றார்.
தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2023
ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/ryN5EmskHD
Listen News!