• Sep 20 2024

திடீரென கண் கலங்கிய கமல்..உறைந்து போன போட்டியாளர்கள்.இனிமேல் தான் தரமான சம்பவம் லோடிங்- நடந்தது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து சில நாட்களிலேயே சண்டைகள், சர்ச்சைகள் ஆரம்பமானது. எனவே ரசிகர்கள் இந்த சீசனை ஆர்வமாக பார்க்க வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்த நிலையில், இந்த வாரம் முதல் முறையாக டபுள் எவிக்ஷன் இருப்பதாக கமல் கூறியதன் படி சனிக்கிழமை ராம் எலிமினேட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை எப்பிஷோட்டில் என்ன நடந்தது என்று வாங்க பார்க்கலாம்.


முதலில் கமல்ஹாசன் போட்டியாளர்கள் தாம் அணிந்த வேடங்கள் குறித்து கேட்டிருந்தார். இதற்கு போட்டியாளர்கள் தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து இந்த வீட்டில் நீங்கள் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது ஷிவின், என் அம்மா என்ன பழக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்தாங்களோ அப்படித்தான் இந்த வீட்டில் இருக்கிறேன். இந்த வீட்டில் நான் இருப்பதைப்பார்த்து அம்மா சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

அதையடுத்து பேசிய அசீம், அம்மா சமைத்து வைத்துக்கொண்டு எனக்காக காத்திருப்பார்கள். சாப்பிட வரேன் என்று சொல்வேன் ஆனால், போக மாட்டேன். ஆனால், இங்கு சாப்பாட்டுக்கும், டீக்கும் அலையும் போதுதான் அம்மாவின் அருமை தெரிகிறது என்றார். இதேபோல, பலரும் தங்களின் அம்மா அப்பா குறித்து உருக்கமாக பேசினர்

இதனை தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், அம்மா அப்பா பத்தி பேசுனீங்க... இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. இதை தெளிவாக சொல்லாமலேயே நாம் அவர்களை இழந்துவிடுவோம். அப்படி ஒரு குழந்தைதான் நான், எனகண்கலங்கி பேசிய கமல், அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, உங்களை பார்த்து எனக்கு பொறாமையா இருக்கு என்றார

பின்பு இந்த வீட்டில் கடுமையாக போட்டி போட்டு விளையாடுபவர் யார் அதிஷ்டத்தில் இந்த வீட்டுக்குள் இருப்பவர் யார்  என்று கேட்ட போது போட்டி போட்டு விளையாடுபவர் தனலக்ஷ்மி என்று கூறப்பட்டது. அதே போல அதிஷ்டத்தில் இருப்பவர்கள் ரச்சிதாவும் ஜனனியும் என போட்டியாளர்கள் கூறியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆயிஷா தான் வீட்டை விட்டு வெளியேறிச்  சென்றார்.அதனைத் தொடர்ந்து இந்த எப்பிஷோட் முடிவடந்தது.

Advertisement

Advertisement