ஒரு காலகட்டத்தில் கவுண்டமணி படங்கள் இல்லாமல் தமிழ் சினிமாவே இல்லை என்ற நிலைமை இருந்தது. அதுமட்டுமின்றி ரஜினி, கமல் போன்ற ஹீரோக்களை வளர்த்து விட்டதில் கவுண்டமணிக்கும் பங்கு உண்டு என்றே சொல்லலாம்.
மேலும் இவர்கள் அப்போது பெரிய ஹீரோக்கள் இல்லை என்பதால் ரஜினி மற்றும் கமல் கவுண்டமணி இப்படி கூப்பிடுவதை பொறுத்துக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த இரு நடிகர்களுமே பெரும் நட்சத்திரமாக வளர்ந்து விட்டனர். அப்போதும் கவுண்டமணி படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மற்றும் கமலை வாடா போடா என்று அழைத்துள்ளார்.
இதனால் இவர்கள் கடுப்பாகி இனி தங்களது படத்தில் கவுண்டமணி நடிக்க கூடாது என்று கூறியுள்ளனர். அப்படியும் நடித்தால் அவருக்கென்று தனி ட்ராக் வையுங்கள். ஹீரோ உடன் காம்பினேஷன் வேண்டாம் என்று கூறியிருக்கின்றனர். அப்போது தான் கவுண்டமணி மற்றும் செந்தில் காம்பினேஷனில் படங்கள் வெளியாக தொடங்கியது.
அப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தால் படம் 90% ஹிட் என்று தயாரிப்பாளர்கள் நம்ப ஆரம்பித்தனர். ஆகையால் ரஜினி மற்றும் கமல் படங்களில் இவர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர். அதன்பிறகு வேறு வழியில்லாமல் மீண்டும் தங்களது படங்களில் கவுண்டமணியை நடிக்க வைக்க டாப் ஹீரோக்கள் சம்மதித்தனர்.
Listen News!