பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6ஆனது தற்போது 4ஆவது வாரத்தை நிறைவு செய்யக் காத்திருக்கின்றது. அத்தோடு இந்நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக வார இறுதி எபிசோட்டுக்காக பல ரசிகர்கள் காத்துக் கிடப்பது வழமை. அதற்கு காரணமே நம்ம ஆண்டவர் தான். ஒவ்வொருவரைப் பற்றியும் புட்டுப் புட்டு வைப்பார்.
அந்தவகையில் இன்றைய தினத்திற்குரிய முதலாவது ப்ரோமோவில் யார் விழுறாங்க என்பதை பார்க்கலாம் என சூசகமாக கூறியிருந்தார் நம்ம ஆண்டவர். இதனைக் கேட்டதும் போட்டியாளர்கள் அனைவரும் விழி ததும்ப முழிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் "நோகாமல் நொங்கு தின்பது என்பதை அனுபவித்தது அமுதவாணன் தான்" எனக் கூறுகின்றார் ஆண்டவர். அதுமட்டுமல்லாது "நொங்கு சாப்பிடிட்டு நொந்திட்டாரு, ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க" எனவும் சிரிச்சுகிட்டே கூறி இருக்கின்றார்.
இதற்கு அமுதவாணன் பதிலளிக்கையில் "என் தம்பியை வெளிய விடுங்கள் நான் ஜெயிலுக்கு போகிறேன் என்று சும்மா ஜாலியாகத் தான் பேசினேன். ஆனால் உடனே ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க, அப்போது தான் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதோட அர்த்தம் புரிந்தது" எனக் கூறி இருந்தார். இதனைக் கேட்டதும் ஆண்டவர் உட்பட அங்கிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
Listen News!