பிக்பாஸ் சீசன் 6 ஆனது நாளுக்கு நாள் களை கட்டிய வண்ணமே இருக்கின்றது. அதாவது ஆரம்பித்த நாளிலிருந்து வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்கள் தமக்குள்ளே அடிக்கடி சண்டை, சச்சரவு, மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் ஆரம்பித்த நாளிலிருந்து அசீம் விக்ரமனுடன் கடுமையான சண்மையில் ஈடுபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அடிக்கடி ஏடிகேவுடன் மோதலில் ஈடுபட்டார்.
குறிப்பாக ஏடிகே தனக்கு பின்னாடி பேசுவதாக தெரிவித்தார். இதனால் கடுப்பான ஏடிகே உடனே "உனக்கும் எனக்கும் சரி வராது" என்று எல்லாம் தெரிவித்திருந்தார். இதனால் அசீம் சாவியக்கூட உன்னால பார்க்க முடில என்று திட்ட கோபமான ஏடிகே நான் இந்த கேமுக்கே வரல என சட்டையைக் கழட்டி எறிந்து போகின்றார்.
இவ்வாறாக நேற்றைய தினம் அசீமிற்கும், adk இற்கும் பயங்கரமான சண்டை இடம்பெற்றிருந்தது. இதனால் எப்போடா கமல் சார் வந்து இதை எல்லாம் தட்டிக் கேட்பார் என பல ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் "உப்பு நாட்டையும் மாத்தி இருக்கு, வீட்டையும் மாத்தி இருக்கு, பதவிக்கு இருக்கும் ஆசை அதற்கான பொறுப்பை செய்ய வேண்டும் என்பதில் இல்லை,
நான் வாரக்கடைசியில் என்ன பேசுவேன் என்பதை யூகிக்க தெரிந்தவர்களுக்கு தான் என்ன பேச வேண்டும் என்பதை யோசிக்காமல் பேசிக் கொண்டிருக்கின்றார்கள், அதை அவங்க கிட்ட தான் பேசணும்" என கூறி இருக்கின்றார்.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!