• Sep 20 2024

திருமூர்த்தியை நேரில் சந்தித்து கமல் செய்த செயல் -இப்படியொரு நல்ல மனசா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துக்கொண்டிருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். நடிப்பிற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்காத நடிகர் தான் இவர்.

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக திகழ்கின்றார். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக கமலின் படம் வெளியாகாததால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். அந்த வருத்தத்தை போக்க தற்போது கமலின் விக்ரம் படம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது.

இவ்வாறு இருக்கையில் விக்ரம் படத்தில் கமல்ஹாசனே எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அனிருத் இசையில் உருவான இந்த பாடல் விமர்சனங்களை சந்தித்தாலும், ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றது.

இந்நிலையில் பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த கமல் இன்று திருமூர்த்தியை நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.

திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதை தெரிந்து கொண்ட கமல்ஹாசன், அதற்கு உரிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார். அத்தோடு விடாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி உள்ளார்.

மேலும் கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் என கமல் தெரிவித்துள்ளார்.

இந்த திருமூர்த்தி மீடியாக்களில் பேசப்படுவது இது முதல் முறையல்ல.எனினும் இதற்கு முன்பு அஜித்தின் விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை பாடிய வீடியோ செம வைரலானது. அதை பார்த்து விட்டு, திருமூர்த்தியின் குரல் வளத்தை படத்தின் இசையமைப்பாளரான டி.இமான் பாராட்டினார்.

அத்தோடு தான் இசையமைக்கும் ஒரு படத்தில் திருமூர்த்தியை பாட வைக்கவும் இமான் ஏற்பாடு செய்து வருகிறார். இசையமைப்பாளர் இமானுடன் திருமூர்த்தியை பலரும் பார்த்துக் கூடும். இமானால் உலகிற்கு அடையாளம் காட்டப்பட்ட திருமூர்த்தி, இன்று கமல்ஹாசனால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்ததுடன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அறிமுகத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement