• Sep 21 2024

நடிகர் நாகேஷை யார் என்று கேட்ட கமலின் மனைவி- இதனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்குநர்கள் பா.ரஞ்சித், முத்தைய்யா உள்ளிட்டோர் படங்களில் அடுத்தடுத்து நடிக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

அத்தோடு இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் ஆரம்பிக்கவும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது. எப்போதுமே மூத்த நடிகர்களுக்கும்,கலைஞர்களுக்கும் மரியாதை கொடுப்பதில் கமல் ஹாசன் தவற மாட்டார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் முதலில் வாணி கணபதியை திருமணம் செய்தார்.அவர்களுக்கு குழந்தை இல்லை.ஆனால் சரிகாவை இரண்டாவது திருமணம் செய்த பின்னர் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

முதல் குழந்தையாக ஸ்ருதி ஹாசன் பிறந்த போது, நடிகர் நாகேஷ் கமல் வீட்டிற்கு சென்றிருந்தாராம். அப்போது கமல் ஹாசன் சரிகாவை ஹாலுக்கு வரும்படி அழைத்தபோது, நாகேஷை முன் பின் தெரியாததால் யார் என்று கேட்டாராம். அதனை கண்ணாடியில் கவனித்துவிட்டாராம் நாகேஷ்.

மும்பையில் பிறந்து வளர்ந்த சரிகாவிற்கு நாகேஷ் தெரியாததால் அப்படி கேட்டுள்ளார். அப்போது, தான் நடித்த சர்வர் சுந்தரத்தின் இந்தி ரீமேக்கான மே சுந்தர் ஹூ என்ற திரைப்படத்தை சுட்டிக் காட்டி, அதில் வரும் ஒரு எமோஷனல் காட்சியை கமல் வீட்டில் சரிகா முன்பு நடித்துக் காட்டி, நான்தான் அந்தப் படத்தின் ஒரிஜினல் பதிப்பில் நடித்த நாகேஷ் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஒரே ஒரு நபருக்காக, வீட்டில் நடித்த அந்த நாகேஷை எனக்கு அவ்வளவு பிடிக்கும். கலைஞன் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று கமல் ஹாசன் அவருக்கு புகழாரம் சூட்டுவார். நடிகர் நாகேஷை காமெடி நடிகராக மட்டும் பார்க்காமல்,அவரை வில்லன்,எமோஷனலான அப்பா, போன்ற பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement