• Sep 20 2024

கைது செய்யப்பட்ட கனல் கண்ணன்... அதிரடியான நிபந்தனை விதித்து விடுவித்த நீதிமன்றம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்தவர் தான் கனல் கண்ணன். குறிப்பாக இவர் ஸ்டண்ட் மாஸ்டராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல சண்டைக் காட்சிகளிலும் நடித்து அசத்தியிருக்கிறார் கனல் கண்ணன்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டு கிறிஸ்துவ மதபோதகர் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்து  இருக்கின்றார். இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இது தொடர்பாக ஜோசப் பெணடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையிடம் கனல் கண்ணன் மீது புகார் ஒன்றினை அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கனல் கண்ணன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 


இந்நிலையில் தனக்கு ஜாமின் தர வேண்டும் என்று கூறி கனல்கண்ணன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இது குறித்த விசாரணை  நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.  இந்த விசாரணையின் போது கனல் கண்ணன் 30 நாள் தினமும் நாகர்கோவில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிராம் அலுவலகத்தில் கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement