கடவுள் இல்லை என்றவரின் சிலையை உடைக்க வேண்டுமென பேசிய கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கடவுள் இல்லை என்றவரின் சிலையை உடைக்க வேண்டுமென ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். ரஜினி, அஜித், சிம்பு என பலரது முக்கிய படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்து கொடுத்துள்ளார். பல படங்களிலும் நடித்துள்ளார் கனல் கண்ணன். இந்நிலையில் சென்னை மதுரவாயலில் கடந்த 30 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார் கனல் கண்ணன்.
மேலும் இதில் பேசிய கனல் கண்ணன், இந்துவாக இருப்பதே பெருமை. ஒருகாலத்தில் வாள் எடுத்து சண்டை போட்டு நாடுகளை பிடித்தனர். எனினும் இப்போது மதமாற்றம் என்ற பெயரில் நாடுகளை பிடிக்கின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பேர் தரிசனம் செய்கின்றனர்.
அப்படி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை உள்ளது. எனினும் அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்றார். கனல் கண்ணன் குறிப்பிட்ட ஸ்ரீரங்கம் கோயிலின் முன்பு பெரியாரின் சிலை உள்ளது. அதை உடைக்க வேண்டுமென கனல் கண்ணன் கூறியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
அத்தோடு கனல் கண்ணன் பேசிய வீடியோவும் இணையத்தில் பெரும் வைரலானது. இந்த நிலையில் திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கனல் கண்ணனை கைது செய்ய மதுரவாயல், வடபழனி மற்றும் வளசரவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அவரது வீடுகளில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில், கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது
பிற செய்திகள்
- என்னை யாரும் அப்படி யாரும் அழைக்காதீங்க- பெயரை மாற்றிய அஜித் பட நடிகை..!
- இயக்குநர் சுந்தர்.சியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!
- குடிபோதையில் உளறி கொட்டிய விஜய் தேவர் கொண்டா – ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு..!
- ஈஸ்வரி எடுத்த முடிவு -கதறி அழும் இனியா…இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- விக்னேஷ் சிவன் விளக்கத்தால் மக்களுக்கு தெரிய வந்த உண்மை- சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!