• Sep 20 2024

“கண்ண காட்டி மொரச்சா” பாட்டு திடீர்னு வைரலாக அந்த பொண்ணுதான் காரணம்.. - எஸ்.ஜே.சூர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் அஜித்தை வைத்து வாலி, விஜய்யுடன் குஷி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆவார். இப்படி தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். 

இவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் சக்கைப்போடு போடுவதால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தொடர்ந்து வில்லன் வேடங்கள் குவிந்து வருகின்றன.அந்த வகையில் இவர் வில்லனாக நடித்த மெர்சல், ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், தற்போது மார்க் ஆண்டனி, ஆர்.சி.15 போன்ற படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.


 எஸ்.ஜே.சூர்யா. இதில் மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாகவும், ஷங்கர் இயக்கும் ஆர்.சி.15 படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் இறைவி படத்தில் இடம் பெற்ற கண்ணைக் காட்டி மொறைச்சா பாடலுக்கு ஒரு பெண் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதனால் இப்பாடலைப் பார்த்த எஸ். ஜே சூர்யா என்னுடைய பாடலை மீண்டும் வைரலாக்கியதற்கு நன்றி. அதுவும் இத்தனை நாட்கள் கடந்து இந்த பாடலை அந்தப் பெண் நடனமாடி வைரலாக்கியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்றும் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement