பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் ராதிகா சென்று இருக்கும் அதே திருமணத்திற்கு தான் பாக்கியா மற்றும் அவரது டீம் சமையல் செய்ய சென்று இருக்கிறது.
பழனிச்சாமி பரிந்துரை செய்ததன் பெயரில் தான் இந்த பெரிய ஆர்டர் பாக்யாவுக்கு கிடைத்து இருக்கிறது. பாக்கியா மீது அதிகம் நம்பிக்கை வைத்து அனைத்து விஷயங்களிலும் பழனிசாமி தான் அங்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் பாக்கியா சமையல் ஆடர் எடுத்திருக்கும் திருமண வீட்டிற்கு கோபியும் ராதிகாவுடன் சென்றிருக்கின்றார். அங்கே கோபி பாக்கியாவுடன் நீங்க எதுக்கு வந்தீங்க என்று கோபி பழனிச்சாமியிடம் சண்டை போடுகின்றார்.
அதனைப் பார்த்த பழனிச்சாமியின் நண்பன் கோபியை ராதிகாவின் கணவர் என தனது மனைவி சொன்னதையும் செல்வி, பாக்கியா தான் கோபியின் மனைவி என சொல்வதையும் கேட்டு அதிர்ச்சியடைகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!