தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான வில்லனாகத் திகழ்ந்தவர் ரகுவரன்.றிப்பாக வில்லன் என்றால், பெரிய மீசை, பாடி பில்டர் போல் உடல்கட்டு, என இருக்க வேண்டும் என்கிற செட்டப்பை உடைத்து, ரசிகர்களை ஸ்டைலிஷ் வில்லனாக மிரள வைத்தவர். பாட்ஷா படத்தில் இவர் நடித்த ஆன்டனி கதாப்பாத்திரம் தற்பொழுதும் விரும்பிப் பார்க்கப்படும் கதாப்பாத்திரமாகவே உள்ளது.
இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு, தன்னுடைய 49 வயதில் உயிரிழந்த சம்பவம் தற்போது வரை பல ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இப்படியொரு சூழ்நிலையில் இவரது அம்மாவும் சகோதரனும் அண்மையில் பேட்டியளித்திருந்தனர்.இந்நிலையில் ரமேஷ்வரன் எதேர்ச்சியாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை சந்தித்து பேசிய விடயம் வைரலாகி வருகின்றது.
இந்த சந்திப்பின் போது சிவராஜ் குமார் ராமேஸ்வரனிடம் ரகுவரனை போல தனித்துவமான நடிகரை பார்த்ததில்லை. அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என பேசியுள்ளார். அதே போல் ரமேஷ்வரனுக்கு தன்னுடைய அடுத்த படத்தில் 100% வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார். ரகுவரனின் தம்பி ரமேஷ்வரன் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்த போதிலும், இதுவரை இவரால் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.
ராமேஸ்வரனுக்கு சிவராஜ்குமார் வாய்ப்பு கொடுப்பதாக உறுதியளித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், இவர் ரகுவரன் அளவுக்கு இல்லை என்றாலும் ரசிகர்களால் கவனிக்கப்படும் அளவிற்காவது தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Listen News!