விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. வெண்பாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அதன் பிறகு பாரதி எடுத்திருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் எப்போது வரும், சீரியல் எப்போது முடியும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
இவ்வாறுஇருக்கையில் பாரதி தற்போது ரிசல்ட் வாங்க நேராக டெல்லிக்கு போவது என முடிவெடுத்து கிளம்பி செல்கிறார். அவர் சென்று பிறகு தான் மேலும் பெரிய விஷயங்கள் இங்கே நடக்கிறது.அதன் பின்னர் ஹேமா குழப்பத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்ல அவரை வில்லி வெண்பா சந்திக்கிறார். இருவருக்கும் நடுவில் வாக்குவாதம் நடக்க ஹேமா கல்லை தூக்கி வெண்பாவை தாக்கிவிடுகிறார்.
அதன் பின் ஓடிச்செல்லும் ஹேமாவை வெண்பா ஆள் வைத்து கடத்துகிறார். ஹேமாவை காணாமல் கண்ணம்மா மற்றும் பாரதி குடும்பம் தவிக்கிறது. இவ்வாறுஇருக்கையில் ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் வெண்பா ஹேமாவை கடத்திய கும்பலிடம் ஹேமாவை கொலை செய்ய சொல்கிறார்.ஆனால் அவர்கள் ஓம் என்று கூறி விட்டு இந்த பெண்ணை ஆள் மாற்றி விட்டால் அதிக பணம் கிடைக்கும் எனக் கூறிவிட்டு கடத்தி செல்கின்றார். கண்ணம்மா இருக்கும் பக்கம் ஹேமாவை கடத்தி செல்ல கண்ணம்மா தனது பிள்ளையைநினைத்து கதறி அழுகின்றார்.
இதோ அந்த ப்ரமோ..
Listen News!