'பாரதி கண்ணம்மா' சீரியலின் முதல் பாகத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் 'பாரதி கண்ணம்மா-2' சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்திற்கு எந்தளவு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே அளவு வரவேற்பை இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வயோதிபக் காதலர்களை பார்த்த பாரதி வியந்து போய் நிற்கின்றார். பின்னர் அவர்களிற்கு அருகில் சென்ற பாரதி "ஐயா இந்த வயசிலும் முகம் சுளிக்காமல் இவங்கள இப்படிப் பார்த்துக் கொள்ளுறீங்களே அது எப்படி" எனக் கேட்கின்றார்.
அதற்கு அந்த வயோதிபர் "காரணம் காதல், ஒரு பெண்ணை மனசார நேசித்தால் நிறம், அந்தஸ்து, கடந்த காலம் இது எல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்காது" எனக் கூறுகின்றார்.
மறுபுறம் கண்ணம்மாவிடம் சென்ற பாரதி "கண்ணம்மா உன் கிட்ட பேசணும்" எனக் கேட்கின்றார். அதற்கு கண்ணம்மா "ஐயோ நான் கண்ணம்மாவே இல்லை" என்கிறார். அதற்கு பாரதி "நீ யாராக வேணுமானாலும் இரு, ஆனால் எனக்கு உன்னை பிடித்திருக்கு, உன் கூட சேர்ந்து சந்தோசமாக வாழணும் என்று ஆசைப்படுகிறேன், அவ்வளவு தான்" என்கிறார். பதிலுக்கு கண்ணம்மா "தயவு செய்து என்னை விட்டிடு" எனக் கூறிச் செல்கின்றார்.
கண்ணம்மாவை விடாது துரத்திச் செல்லும் பாரதி "சித்ரா ஐ லவ் யூ" எனக் கூறுகின்றார், அதைக் கேட்டதும் கண்ணம்மா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
Listen News!