• Sep 20 2024

வீட்டை விட்டு போகப் போறேன் என முடிவெடுத்த கண்ணன்- மீனாவால் குழப்பத்தில் இருக்கும் ஜீவா- கதிர் எடுத்த முடிவு-Pandian Stores Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

எல்லோரும் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மூர்த்தி நாங்க இதுக்கு முன்னாடி போலீஸ் கிட்ட போனது இல்லை.இப்போ அவன் பார்த்த வேலையால் போக வேண்டியதாக இருக்கு என்று கண்ணனை குற்றம் சாட்டி பேச, கண்ணன் தான் வீடடை விட்டுப்போகப் போவதாகச் சொல்கின்றார்.


இதைக் கேட்ட தனம் இனி யாராவது வீடடை விட்டு போறே்ன என்று பாருங்க அவ்வளவு தான் என்று திட்டுகின்றார். பின்னர் சாப்பிட்டு முடித்ததும் ஜீவாவும் மீனாவும் ரூமில் பேசிட்டு இருக்கின்றனர். அப்போது ஜீவா கயல் எங்கே என்று கேட்க அவ, தனம் அக்கா கூட துாங்கிறா என்று சொல்லிவிட்டு ஜுவாவிடம் தனக்கு 4 லட்சம் பணம் வேண்டும் என்கின்றார்.

அப்போது ஜீவா எதுக்காக அவ்வளவு பணம் என்று கேட்ட போது மீனா அதை மட்டும் கேட்காத, மூன்று லட்சமாவது யார் கிட்டையாவது வாங்கிக் கொடு, காரணம் மட்டும் கேட்காத என்று சொல்கின்றார். இதைக் கேட்ட ஜீவா கடும் குழப்பத்தில் இருக்கின்றார். இதனால் விடிந்ததும் கதிர் கிட்ட மீனா பணம் கேட்ட விஷயத்தை செல்கின்றார்.


மீனா ஏதோ பெரிய பிரச்சினையில இருக்கிறா, அதனால தான் பணம் கேட்கிறா, ஆனால் என்ன பிரச்சினை என்று மட்டும் சொல்லமாட்டேன் என்கிறாள் என்று சொல்ல கதிர் அதெல்லாம் ஒன்றும் இருக்காது அவங்க உன் கிட்ட சும்மா கேட்டிருப்பாங்க என்று சமாளிக்கின்றார். பின்னர் மீனாவிடம் சென்று கதிர் அண்ணன் கிட்ட பணம் கேட்டீங்களா என்று கேட்கிறார்.

அப்போது மீனா பணம் அவனும் தந்தால் உங்களுக்கு உதவியாக இருக்கு தானே, அதான் கேட்டேன் என்று சொல்ல கதிர் அதெல்லாம் வேணாம்.நான் பார்த்துக் கொள்கின்றேன் நீங்க கவலைப்படாதீங்க என்று சொல்லி விட்டுச் செல்கின்றார். பின்னர் ஜீவா கண்ணனை மீண்டும் பாங்கில் சேர்ப்பதற்காக கூட்டிட்டு போக ரெடியாகின்றார்.


அப்போது எல்லோரும் கண்ணனுக்கு நம்பிக்கை கொடுக்கின்றனர். கண்ணனுக்கு வேலை கிடைக்கனும் என்று ஐஸ்வர்யா பூஜை ரூமிலிருந்து வணங்குகின்றார். ஐஸ்வர்யா சாமி கும்பிடுவதைப் பார்த்த கதிர் ஆச்சரியப்பட்டு நிற்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement