விஜய் டிவியல் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்..இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...
கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் டிவி மற்றும் வோசிங் மிசின் என எலக்ரிக்கல் பொருட்கள் வாங்க கடைக்கு வந்து இருந்தனர்.
அந்த நேரம் அதே கடைக்கு மீனாவும் வந்து இருந்தார்.இதன் பின் மீனாவைப் பார்த்து கண்ணன் எப்பிடி இருக்கிறீங்க அண்ணி எனக் கேட்கின்றார்.அதற்கு பதிலளித்து விட்டு நீங்க எப்பிடி இருக்கிறீங்க என்று கேட்கிறார் மீனா.
இதன் பின் ஞாயமா நீங்களும் வீட்டை விட்டு வந்து இருக்கக் கூடாதுடா...என மீனா சோகமாக கேட்கின்றார்.இதற்கு ஐஸ்வர்யா..“நீங்க மட்டும் வரலாம் நாங்க வரக்கூடாதா..” எனக் கேட்கின்றார்.
அதன் பிறகு சாமான் பற்றி மீனாவிடம் பேசுகின்றார் கண்ணன்.அதன் பிறகு பில் போடும் போது கண்ணனின் 3 மாத சம்பளமே பில்லாக வர கண்ணன் ஷாக்கடைகின்றார்.இதன் பிறகு ஐஸ்வர்யா EMI தானே அது பார்த்து கொள்ளலாம் எனக் கூறி சாமான் அனைத்தையும் வாங்கிவிடுகின்றார்.
இதன் பிறகு மீனா தனத்திற்கு போன் பண்ணி நடந்ததை கூறுகின்றார்.நீங்கள் தான் அவங்களுக்கு எடுத்து சொல்லனும்... அதிக விலைக்கு சாமான் வாங்கி உள்ளார்கள்.எப்படி கட்டுபடியாகும் எனடறு தெரியவில்லை எனக் கூறுகின்றார்.இப்படி பேசி முடிந்தவுடன் முல்லையும் ஐஸ்வர்யாவை திட்டுகின்றார்.
இதன் பிறகு நேரடியாகவே தனம் அங்கு செல்லவும் அவரை எதிர்த்து எதிர்த்து பேசி அவமானப்படுத்துகின்றார் ஜஸ்வர்யா.இதன் பிறகு ஐஸ்வர்யா டீ கொடுத்தும் குடிக்காமல் செல்லுகின்றார் தனம்.அவர் ஏன் இப்படி போறார் என்றால் அவருக்கு கடுப்பு தான் எனக் கூறி கண்ணனை உசுப்பேத்துகின்றார்.ஆனால் கண்ணனோ அப்பிடி அண்ணி இல்லை எனக் கூறுகின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.
Listen News!