• Sep 21 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய கண்ணன்?-இனி அவருக்கு பதில் இவர் தானா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டுள்ளது இந்த சீரியல். தனியாக இருப்பது எவ்வளவு சுகமோ அதேபோல் தான் கூட்டுக் குடும்பம் என்பதை உணர்த்தும் தொடராக விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதிலும் சண்டை, சர்ச்சை, சந்தோஷம், கொண்டாட்டம் என பலதும் உள்ளது, ஆனால் குடும்பமாக அதை எதிர்நோக்கும் போது அழகாக இருக்கும் என்பதை இந்த கதையில் கல நிகழ்வுகள் காட்டியுள்ளது.

இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு இரண்டு தம்பிகள் வெளியே வந்துவிட்டார்கள். எனினும் தற்போது முல்லை வளைகாப்பு நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்பது தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


சோசியல் மீடியாவில்  பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து கண்ணன் விலகிவிட்டதாக சொல்லப்படுகின்றது.

காரணம் ஐஸ்வர்யாவாக நடிக்கும் தீபிகா இன்ஸ்டா பக்கத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நவீனுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு சுவாரஸ்யமான ஒன்று வரவிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

இதனால் கண்ணன் தொடரில் இருந்து விலகிவிட்டாரா, இனி இவர் தான் கண்ணனாக நடிக்க போகிறாரா அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சியா என ரசிகர்கள் குழம்பி போய்யுள்ளனர்.




Advertisement

Advertisement