• Sep 20 2024

ஜீவாவிடம் உண்மை எல்லாத்தையும் உளறிய கண்ணன்- ஐஸ்வர்யா செய்த வேலையால் அதிர்ச்சியில் உறைந்த மீனா மற்றும் முல்லை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

ஹாஸ்பிட்டலுக்குச் சென்று தனம் எப்படி இருக்கிறார் என்று மீனாவும் முல்லையும் பார்க்கின்றனர்.அப்போது மீனா இந்த சின்ன விஷயத்திறகாகத் தான் பயந்து கொண்டு இருந்தீங்களா அக்கா, எல்லாமே நல்லபடியா முடிஞ்சிருச்சு தேவையில்லாம நிங்க தான் நிறைய விஷயத்திற்கு பயப்பிடுறீங்க ஒரு பிரச்சினையும் இல்லக்கா என்று சமாதானப்படுத்துகின்றனர்.


பின்னர் தனத்தைப் பார்க்க ஐஸ்வர்யாவும் கண்ணனும் வருகின்றனர். அப்போது ஐஸ்வர்யா என்னை விட மீனா சித்தி தான் மோசமானவங்க அவங்க கிட்ட பார்த்துப் பழகு என்று சொல்கின்றார். அதே போல கண்ணனும் இருக்கிற சித்தப்பாவிலையே நான் தான் மோசமான சித்தப்பா என்று சொல்ல மீனா கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் நக்கலடிக்கின்றார்.

தொடர்ந்து வீட்டுக்கு வரும் ஐஸ்வர்யா தனது சித்தியிடம் குழந்தை எப்படி இருக்கு என்ற விஷயத்தைச் சொல்கின்றார். அப்போது அவர் என்னடி எல்லாரும் பொம்பிள்ளை பிள்ளையாவே பெத்திட்டிருக்கிறீங்க உங்க யாருக்குமே அண்ணன் இல்லை என் புருஷன் தானே மாமாவாக இருந்து எல்லோருடைய குழந்தைக்கும் சடங்கெல்லாம் செய்யனும் என்று சொல்கின்றார்.

இதைக் கேட்ட கதிர் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கிறீங்களே மற்றப்பக்கத்தை பார்க்கலையே நீங்க உங்களுக்கும் தான் அண்ணன் தம்பி இல்லையே உங்களுக்காக நாங்க தானே வந்து நிற்கனும் என்று நக்கலடிக்கின்றார். தொடர்ந்து ஹாஸ்பிட்டலில் கண்ணனைக் கண்ட ஜீவா எதுக்குடா இங்க தனியாக நிற்கிற என்று விசாரிக்கின்றார்.


அப்போது கண்ணன் தனக்கு குற்ற உணர்வாக இருப்பதாக சொல்கின்றார். அத்தோடு கடன் கழுத்தை நெரிச்சதால லஞ்ச் வாங்கிட்டேன். லஞ்சம் கொடுத்தவங்க மனது எத்தனை பாடுபட்டிருக்கும் என்று சொல்லி அழ முதலில் திட்டிய ஜீவா சரி அதெல்லாம் விடு லஞ்சம் வாங்கின எல்லார் கிட்டையும் பணத்தை திரும்பக் கொண்டு போய் கொடுத்திடலாம் என்று சமாளிக்கின்றார்.

தொடர்ந்து வீட்டில் தனியாக அடுத்து என்ன பண்ணலாம் எப்படி தனத்திற்கு ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம் என்று கதவை மூடிட்டு முல்லையும் மீனாவும் பேசிட்டு இருக்கின்றனர். பின்னர் வெளியே போகலாம் என்று இருவரும் கதவைத் திறக்க ஐஸ்வர்யாவும் அவரது சித்தியும் கதவின் அருகே நின்று அவர்கள் பேசுவதை ஒட்டி நின்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதைப் பார்த்த மீனாவும் முல்லையும் அதிர்ச்சியடைந்ததோடு ஐஸ்வர்யாவிடம் எதையும் சொல்லாமல்  சமாளிக்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம். 


Advertisement

Advertisement