• Sep 21 2024

மீண்டும் கடைக்கு போக ஆசைப்படும் கண்ணன்- புலம்பிக் கொண்டே இருந்த தனத்தை அடக்கிய முல்லை- குழப்பத்தில் ஐஸ்வர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸடோர்ஸ் . அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

முல்லையின் அம்மா வீட்டிற்கு வந்து முல்லையிடமும் தனத்திடமும் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது எதுக்காக புடவை எல்லாம் மடிச்சு வைச்சிருக்கிறீங்க என்று கேட்ட போது அக்காவுக்கு திடீரென பிரசவ வலி வந்தாலும் என்று தான் இப்பவே ட்ரெஸ்லாம் மடிச்சு வைச்சிருக்கிறோம் என்று சமாதானப்படுத்துகின்றார்.


பின்னர் தனத்தின் அண்ணா பணத்துடன் வந்து தனத்திடம் பணத்தைக் கொடுத்து விட்டு பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது தனம் பணம் வாங்கிட்டேன் சீக்கிரமாவே நிலத்தை உன் பெயரில மாத்தித் தந்திடுறேன். இந்த விஷயத்தை மட்டும் மாமா கிட்ட சொல்லிடாத என்கின்றார். தொடர்ந்து என்னோட இந்தக் குழந்தைக்கும் நீ தான் தாய் மாமா நீ தான் எல்லாமே பண்ணனும் என்கின்றார்.

பின்னர் அத்தாச்சியை வரச் சொல்லி கண்ணன் ஐஸ்வர்யா முன்னாடி அந்தப் பணத்தை அத்தாச்சியிடம் கொடுக்கின்றார் தனம். அப்போது முல்லை இரண்டு நாள் குழந்தைகளோடு வந்திருக்க முடியுமா? அக்காவை செக்கப்புக்கு கூட்டிட்டு போகனும் என்று முல்லை சொல்கின்றார். முதலில் மறுத்த அத்தாச்சி பின்னர் சம்மதிக்கின்றார்.

பின்னர் எல்லாக் குழந்தைகளையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் தனம் எல்லாருக்கும் அட்வைஸ்ட் பண்ணுகின்றார். குழந்தைகளை நல்லா பார்த்துக்கணும் அவங்க விரும்பினதை படிக்க வைக்கனும் என்றெல்லாம் சொல்கின்றார். தொடர்ந்து மூர்த்தி கதிருடன் இணைந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதும் கடைக்கு ஆட்கள் தேவை என்றால் வைச்சுக்கோங்க என்கிறார்.


கண்ணன் தானும் கடைக்கு வரவா என்று கேட்க மூர்த்தி எதுவும் சொல்லாமல் சாப்பிடுகின்றார். தனம் இப்படியே எல்லோருக்கும் அட்வைஸ்ட் பண்ண முல்லை கவலைப்படாதீங்க அக்கா இந்த சாம்ராஜ்யத்தை நாங்க பார்த்துக்கிறோம் நீங்க ஒழுங்கா சாப்பிடுங்க என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement