சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர் நீச்சல்' தொடரானது எப்போதுமே முன்னிலை வகிக்கும் ஒரு சீரியலாக இருந்து வருகின்றது. பெண் அடிமைத்தனத்தைக் கதைக்களமாக கொண்டு இந்த சீரியல் அமைந்திருக்கின்றது.
இந்நிலையில் தற்போது மற்றுமோர் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனி சக்தியிடம் "எனக்கு சக்தி தான் வேணும் என்கிற எண்ணம் என் மனசிற்குள் இருக்கிறது" எனக் கூறுகின்றார்.
பதிவிற்கு சக்தி "நீ என்கூட இருக்கிறது மட்டும் தான் என் வாழ்க்கை" என்கிறார். உடனே ஜனனி சக்தியை கட்டியணைத்துக் கண் கலங்குகின்றார்.
மறுபுறம் நந்தினி கிச்சனில் "முதல்நாள் நல்ல படியாகப் போகட்டும் அப்புறமாக பக்குவமாய்ப் பார்த்து சொல்லிக்கலாம்" என ஏதோ ஒளிவு மறைவாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
அந்தசமயத்தில் அங்கு வந்த கரிகாலன் "சின்னக்கா தம்பிக்குத் தெரியாமல் ஏதாச்சும் திருட்டுத்தனம் பண்ணுறீங்களா" எனக்கேட்டு விட்டு அங்கிருந்த பானையைத் திறக்கின்றார். அப்போது ரேணுகா அதனைத் திறக்க விடாமல் தடுக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.
Listen News!