• Sep 21 2024

குணசேகரனை முட்டாள்ப்பயல் எனக் கலாய்த்த கரிகாலன்- நந்தினியிடம் ரகசியம் பேசவந்த ஜனனி- இனி நடக்கப் போவது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.

இந்த சீரியலில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கரிகாலன் இந்த வீட்டில என் உலகம் உயிர் எல்லாமே கிடக்குது என்று சொல்லும் போது குணசேகரன் அடுத்தவன் வீட்டில ஏன் இவ்வளவு ஐட்டத்தையும் வச்சிருக்கிறீர் என்று கேட்ட போது கரிகாலன் நீ விவரமா கேட்கிறீர். ஆனால் முட்டாப் பயல் மாதிரி பேசிறீர் என்று சொல்கின்றார்.


பின்னர் ஜன்னல் வழியாக ஜனனி நந்தினியிடம் பேச வர உள்ளே கரிகாலன் வந்து சின்னக்கா என்ன பண்ணுற என்று கேட்கின்றார். இதனால் ஜனனி ஒளிந்து கொள்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement