• Sep 20 2024

ஆதிரையை நலம் விசாரித்தவரை திட்டிய கரிகாலன்- கதிரை வைத்து குணசேகரன் போட்ட புது பிளான்- விறுவிறுப்பான திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

இதில் குணசேகரன் சொத்தை எப்படியாவது மீட்டு விடவேண்டும் என்பதற்காக சென்னைக்கு கதிரைக் கூட்டிக் கொண்டு சென்றிருக்கின்றார். அதே போல ஜனனியும் கதிருடன் சேர்ந்து ஜீவானந்தத்திடம் இருந்து சொத்தை எப்படியாவது மீட்டிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்.


இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் குணசேகரன் கதிரிடம் எல்லா விஷயங்களிலும் வளவனை முன்னாடி விட்டிட்டு நீ பின்னாடி நிற்கனும். எந்த விஷயத்திலும் நீ தலை காட்டக்கூடாது என்கின்றார்.

அதே போல வீட்டுக்கு வந்த ஜோசியர் ஆதிரையைப் பார்த்து எப்பிடி இருக்கிற என்று கேட்டு விட்டு, இந்த வீட்டில் இருந்தால் நீ எப்படி நல்லா இருப்ப என்று சொல்ல, அதற்கு கரிகாலன் போனது என் வாழ்க்கை நீ என்ன பேசிட்டு இருக்கிற என்று கேட்கின்றார்.இதனால் ரேனுகாவும் ஆதிரையும் என்னன சொல்வதென்று தெரியாமல் முழிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement