• Sep 20 2024

பக்கவாதமா இது..? புட்டுப் புட்டு வைக்கும் ரேணுகா... குணசேகரன் மேல் கரிகாலனுக்கு வந்த புது சந்தேகம்... சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் ஞானம் ரேணுகாவிடம் "என்ன பேச்செல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு" எனக் கேட்டு மிரட்டுகின்றார். பதிலுக்கு குணசேகரன் "அது ரொம்ப நாளாவே அப்படிதான் போய்ட்டு இருக்கு" என்கிறார்.


பின்னர் ரேணுகா "பக்கவாதம் வந்த இப்பிடி யாரையும் நான் பார்த்ததே இல்லை, இது பக்காவான பக்கவாதமாய் எல்லோ இருக்கு" என்கிறார். 

மறுபுறம் குணசேகரன் ஞானத்திடம் "எப்பிடிக் கணீர் கணீர் என்று பேசினேன் நானு, ஆனால் இப்போ பேச்சே குளறிக் குளறித்தான் தான் வருது" என்கிறார். அதற்கு ஞானம் "நீங்க ஒன்றும் கவலைப்படாதீங்க நன் போயிற்று தண்ணீர் எடுத்திற்று வாறன்" எனக் கூறி உள்ளே நுழைகின்றார்.


ஞானம் போனதும் குணசேகரன் "தனது இரண்டு கைகளையும் வடிவாக ஆட்டி அசைக்கின்றார். பின்னர் அந்த இடத்திற்கு கரிகாலன் வந்ததும் கையை ஆட்டி அசைக்காமல் அப்படியே வைக்கின்றார். இதனைக் கரிகாலன் பார்த்து விட்டார் போல் தெரிகிறது. உடன் கரிகாலன் குணசேகரனைப் பார்த்து "மாமா எனக்கு ஒரு சந்தேகம்" என்கிறார். 


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.  

Advertisement

Advertisement