தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தி தற்போது ர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
வித்தியாசமான கதைக்களத்தை மையாக வைத்து உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, கார்த்தியின் அடுத்த படத்தை பிரபல இயக்குநரான நலன் குமாரசாமி இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இந்த தகவல் முன்பே கசிந்தாலும் கூட தற்போது இந்த தகவல் உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் கூடுதலான புதிய தகவல் என்னவென்றால், கார்த்தி – நலன் குமாரசாமி இணையும் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. எனவே அதற்குள் கார்த்தி தற்போது நடித்து வரும் ஜப்பான் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என தெரிகிறது.
மேலும், நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!