• Sep 20 2024

சுந்தரியை விரும்ப ஆரம்பித்த கார்த்தி-மறைமுகமாக தன் கணவனை திட்டும் அனு- அதிரடியான சுந்தரி சீரியல் புரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஆரம்பகாலம் முதல் தற்பொழுது வரை பல சூப்பர் ஹிட்டான சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றது. அந்த வகையில் இதில் ஹிட்டாக திருமதி செல்வம் அத்திப்பூக்கள் துளசி கோலங்கள் எஎன பல சீரியல்கள் இதில் ஒளிபரப்பாகி முடிவடைந்துள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது கயல் சுந்தரி வானத்தைப் போல கண்ணான கண்னே ஆகிய சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இதில் விறுவிறுப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.

தனது கணவன் வேறோரு பெண்ணை மணந்தது அறிந்தும் தன்னுடைய லட்சியத்திற்காக போராடி வரும் பெண்ணாகவே இந்த சுந்தரி காணப்படுகின்றாள். இந்த சீரியல் பல பெண்களின் வாழ்க்கைக்கு வழி காட்டியாகவும் இருக்கின்றது.

இந்த நிலையில் இச் சீரியலின் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் தலையில் அடிபட்டதினால் வைத்தியசாலையில் இருக்கும் சுந்தரியை அவரது கணவரான கார்த்தி பார்க்கச் சென்றதோடு தான் அவளை விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதுவரை சுந்தரிக்கு எதிராக ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் இப்படி மாறியது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


இதனால் அடுத்து என்ன நடக்கும் கார்த்தி சுந்தரியுடனும் அனுவுடனும் சேர்ந்து வாழப் போகின்றாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement