நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வனில் வந்தியதேவனாக வரும் கார்த்தி சமீபத்தில் கலந்து கொண்ட ps 1 படத்தின் ஆடியோ லான்ச் மிகப்பெரிய வரவேற்புகளை பெற்றது.
எனினும் அதை அடுத்து முத்தையா இயக்கத்தில் இவர் நடித்துள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
மதுரையில் நடைபெற்ற இந்த விழாவில் கார்த்தி நாயகி அதிதி சங்கர், இயக்குநர் சங்கர் மற்றும் அவரது மனைவி, நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ராஜா முத்தையா மன்றத்தில் இந்த விழா நடைபெற்றது.மேலும் இவ் விழா அரங்கத்தின் வாயிலில் வீரர்களின் சிலைகள் மற்றும் தாரை தப்பட்டை பறையென தூள் கிளப்பியது நிகழ்ச்சி குழு.
முன்னதாக கொம்பன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி, முத்தையா இணைந்துள்ள இந்த கூட்டணி பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு சூர்யாவின் 2டி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செல்வகுமார் மேற்கொள்ள படத்தொகுப்பை வெங்கட்ராஜன் செய்துள்ளார். மேலும் இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று வெளியீட்டு தேதி மாற்றி வைக்கப்பட்டது.
அதன்படி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி படம் வெளியாக உள்ளது என 2டி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.இந்த படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் கஞ்சா பூ கண்ணாலே பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.
இந்நிலையில் மதுரையில் நேற்று மாலை நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் கார்த்தி இன்று அதிகாலை ஆறு மணி அளவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு வந்துள்ளார். எனினும் தெற்கு கோபுரம் வழியாக சென்று அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி பல வருடங்களுக்கு பிறகு கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது மனநிம்மதியை அளிக்கிறது என்றும், ஆத்ம திருப்தி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- என்னை யாரும் அப்படி யாரும் அழைக்காதீங்க- பெயரை மாற்றிய அஜித் பட நடிகை..!
- இயக்குநர் சுந்தர்.சியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!
- குடிபோதையில் உளறி கொட்டிய விஜய் தேவர் கொண்டா – ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு..!
- ஈஸ்வரி எடுத்த முடிவு -கதறி அழும் இனியா…இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- விக்னேஷ் சிவன் விளக்கத்தால் மக்களுக்கு தெரிய வந்த உண்மை- சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!