நடிகர் கார்த்திக்கும் தனக்குமான உறவை பற்றி நடிகை குஷ்புமுதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை குஷ்பு 90 காலகட்டத்தில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர். அப்போது இருந்த இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் என்று கூட சொல்லலாம். அந்தவகையில் ரசிகர்கள் இவருக்கு கோவிலும் காட்டியுள்ளனர்.
தற்போதும் சினிமாவில் இயங்கி வருகிறார். சின்னதிரையிலும் கால்பதித்த குஷ்பு அங்கும் பிரபலமாக இருந்து வருகிறார். இதனிடையே அரசியல் பக்கம் தனது வாழ்க்கையைத் திருப்பிய நடிகை குஷ்பு, பல கட்சிகளில் பயணம் செய்தார். ஒரு கட்டத்தில் பாஜக கட்சியில் இணைந்த அவர், தற்போது தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் பிரதான யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் கார்த்திக் குறித்து சுவாரஸ்சியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதாவது “உலகத்திற்கு தான் அவர் கார்த்திக் எங்களுக்கு அவர் முரளி. முரளியைப் பற்றி உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன்; அவர் ஒரு சோம்பேறித்தனத்தின் உச்சம். படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வரவே மாட்டார். மிகவும் சீரியஸான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அவர் சிரித்துக் கொண்டிருப்பார்.
ஒரு சீரியஸான சீன் எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் கார்த்தி அங்கிருந்து சிரிப்பு மூட்டும் விதமாக ஏதாவது செய்து கொண்டிருப்பார். எங்களது நட்பு ஒரு சண்டையில்தான் ஆரம்பித்தது. என்ன அவர் சைனீஸ் பட்லர் என்று அழைப்பார். என்னை கவர எதுவுமே செய்யவில்லை.
அவருடன் இருக்கும் ஒரே குறை அந்த சோம்பேறித்தனம். மற்றபடி ஒன்றும் கிடையாது. ஆனால், கார்த்திக் ஒரு வேஸ்ட் வேஸ்ட்.. என்னை அவர் கவர எதுவுமே செய்ய இல்லை.
தொடர்ந்து சத்யராஜின் புகைப்படத்தை எடுத்த குஷ்பு சத்யராஜ் பற்றி மற்றவர்களுக்கு தெரியாத விஷயங்கள் எனக்கு தெரியும் ஆனால் அதை பொது சபையில் சொல்ல முடியாது என்று சொன்னார்.
தொடர்ந்து சுஹாசினியை பற்றி பேசிய அவர் சுஹாசினி மிகவும் எமோஷனலான பர்சன். எளிதாக வருத்தம் அடைந்து விடுவார். வருத்தம் அடைந்தால் அவர் எனக்குத்தான் போன்செய்வார். அவர் எளிதாக எல்லாரையும் நம்பி விடுவார். தொடர்ந்து அரவிந்த்சாமி பற்றி பேசியவர் அரவிந்த்சாமியை பற்றி வதந்திகள் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை அவர் மிகவும் க்ளீன் என்று பேசினார்.
Listen News!