• Sep 20 2024

கார்த்திக் பட நாயகி திவ்யா உன்னியின் மகளா இவங்க... அம்மாவும் பொண்ணும் எப்படி இருக்காங்க என்று பாருங்க..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பார்த்திபன் நடிப்பில் வெளியான 'சபாஷ்' என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யா உன்னி. எனினும் இவர் முதன்முதலில் மலையாள சினிமாவிலே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

அதுமட்டுமில்லாது இவர் ஒரு சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். அத்தோடு பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் உட்பட்ட பல்வேறு நடனங்களை கற்று உள்ளார். மேலும் இந்த நடனத்தின் வாயிலாக பல விருதுகளையும் பெற்று உள்ளார்.


இவர் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானவர். அந்தவகையில் இவர் தமிழில் 'வேதம், பாளையத்தம்மன், பிரபலமானர். கண்ணன் வருவான்' என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றார். 


இவ்வாறாக படங்களில் பிஸியாக இருந்து வந்த திவ்யா அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சுதிர் சேகர் என்பவரை 2002-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு அர்ஜுன் மற்றும் மீனாட்சி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்


எனினும் சில காலங்களின் பின்னர் இவர்கள் இருவருக்கும் பெரிய கருத்து வேறுபாடு பயங்கரமாக ஏற்பட்டது. இதனால் 2016-ஆம் ஆண்டு தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.


இவ்வாறாக பல தடைகளையும் தாண்டி வந்த திவ்யா உன்னி நடனத்தை தாண்டி சமூக வலைத்தளங்களிலும் அலாதி பிரியம் உடையவர். தன்னுடைய அதிகளவான நேரத்தை அதிலே செலவிட்டு வருவது வழமை. அந்தவகையில் தற்போதும் தன்னுடைய மகளுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்து அதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.


அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement