சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியல் தற்பொழுது அதன் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.
அதாவது சுந்தரி படித்து முடித்து விட்டு கலெக்டர் இன்டர்வியூவுக்கும் போய்ட்டு வந்து விட்டார். அத்தோடு அனுவுக்கு கார்த்திக் சுந்தரியைத் முதலில் திருமணம் செய்து உள்ளார் என்ற உண்மையும் தெரிந்து விட்டது.
இதனால் அவர் வயிற்று வலி வந்து ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கண்டிசன் மோசமாக இருப்பதால் என்ன செய்வதுதென்று தெரியாமல் கார்த்திக் அழுகின்றார்.
அப்போது அனுவின் நண்பர் வரும் போது கார்த்திக் அனுவுக்கு என்ன ஆச்சு என்று கேட்கும் போது, அவர் அனு பிழைச்சு வந்து உன்னோட வாழுவா என்று எதிர்பார்க்காத என்று சொல்கின்றார். தொடர்ந்து கார்த்திக் சுந்தரியிடம் அனுவுக்கும் குழந்தைக்கும் ஒன்றும் ஆகாது என்று சொல்லும்படியாக சொல்கின்றார்.
அப்போது சுந்தரி உண் பொண்டாட்டிக்கும் புள்ளைக்கும் ஒன்றும் ஆகாது என்று சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!