• Sep 20 2024

என்னடா நடக்குது அங்க.. வந்தியந்தேவன் என்ற பெயரில் த்ரிஷாவிடம் வழிந்த கார்த்தி.. தாறுமாறாக வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மன்னன் ராஜ ராஜ சோழனை பற்றி கல்கியினால் புனையப்பட்ட நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. 


இப்படத்தின் முதல் பாகமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தோடு இப்படம் வசூலிலும் 500 கோடிக்கு மேல் பெற்று சாதனை படைத்தது வருகின்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


அந்தவகையில் கார்த்தி மற்றும் த்ரிஷாஇருவரும் ட்விட்டரில் ஒரு வித்தியாசமான முறையில் ஒருவருக்கொருவர் செய்தி அனுப்பி ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரையும் கிண்டலடித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement