தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கவுதம் கார்த்திக். பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான இவர் 'கடல்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து 'இவன் தந்திரன், ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. மஞ்சிமா மோகன் 'அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் "தேவராட்டம்" என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இக்காதலை சமூக வலைத்தளத்தில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
அதுமட்டுமல்லாது கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது. இதற்குப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்திருந்தனர். இந்நிலையில் இவரது திருமணம் குறித்த மற்றோரு தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதாவது கவுதமின் திருமணத்தை கார்த்திக் திரையுலகம் முழுவதும் சொல்லி பிரமாண்டமாக நடத்த ப்ளான் செய்துள்ளார். ஆனால் கவுதம் கார்த்திக் அடித்ததே வெறும் 250 பத்திரிகை தானாம். அதில் ஒரு பத்திரிகையை அப்பாக்கு கொடுத்துள்ளார்.
இதைக்கண்ட கார்த்திக் அதிர்ச்சியாகி தனது மகனின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்ற தன்னுடைய கனவுக்கு அவரே பூட்டு போட்டு விட்டாராம்.
Listen News!