விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி.இளைஞர்கள் ரசிக்கும் ஒரு தொடராக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது . இந்த தொடர் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.
காதல், குடும்பம், எமோஷன் இடையில் கொஞ்சம் சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக தொடர் அமைந்துள்ளது.இதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரியங்கா மற்றும் ஸ்வாதிநாதன் என இருவருக்கும் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள்.
சீரியலின் கதைப்படி சூர்யா வெண்ணிலாவைத் திருட்டுத்தனமாக திருமணம் முடித்து விட்டார். இருந்தாலும் வெண்ணிலா இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளாதது போல மனதுக்குள் இருந்தாலும் விருப்பம் இருந்தாலும் சூர்யா மீது வெறுப்பை மட்டும் காட்டி வருகின்றார்.
இப்படியான நிலையில் தற்பொழுது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த சீரியலில் சூர்யாவாக நடித்து வரும் சுவாமி நாதன் தெலுங்கு சீரியல் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா இந்த சீரியலில் இருந்து விலகிடுவாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!