• Sep 21 2024

மனைவிகளுக்கு பிடித்ததை செய்யும் கதிர் மற்றும் கண்ணன்- அதிர்ச்சியில் உறைந்த ஜீவா- கடும் கோபத்தில் மீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கம் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம். மீனாவின் மாமனார் பத்திரிகை வைக்க வரச் சொல்லியும் ஜீவா கடை வேலை இருந்ததால் பத்திரிகை வைக்க போகவில்லை. பின்னர் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க அவர்கள் வீட்டிற்குச் செல்கின்றார்.

அப்போது ஜீவாவின் மாமனார் வருத்தமாக இருக்கு எனக்கு கால் ஏலும் என்றால் உங்க கிட்ட கேட்டிருக்க மாட்டேன். எதவி இல்லை என்று தான் உங்க கிட்ட கேட்டேன்.உங்க வீட்டில இப்படியொரு நிகழ்வு என்றால் போகாமல் இருப்பீங்களா என்று கேட்க ிவுா மாமனாரிடம் மன்னிப்புக் கேட்பதோடு நாளைக்கு வாரேன் என்று சொல்லி விடுகிறார்.


பின்பு வீட்டுக்கு வந்த ஜீவா மீனாவிடம் பேசிட்டு இருக்கும் போது மீனா கண்ணன் வீட்டில் மொத்த சம்பளத்தையும் சொல்லாது மறைத்த கதையை சொல்ல ஜீவா நம்பாது கண்ணனிடம் போய் கேட்கின்றார். அப்போது கண்ணன் ஆமாம் அண்ணா காசை மொத்தமாக கொடுத்திட்டு எல்லாத்துக்கும் அண்ணன் கிட்ட போய் நிற்க முடியாது தானே அதான் கொடுக்கல.

எங்களோட தேவைக்கும் பணம் வேணும் தானே என்று கூற ஜீவா இது தப்புடா அண்ணா அண்ணிக்கிட்ட இதை சொல்ல வேணாமா என்று அட்வைஸ்ட் பண்ண,ஐஸ்வவர்யா கண்ணன் கிட்ட இப்படியொரு அட்வைஸ்ட் பண்ணினதே நான் தான் மாமா மீனா அக்கா மாதிரி எல்லாம் எங்களால பொறுமையாக இருக்க முடியாது எங்களுக்கும் தேவை இருக்கு தானே என சொல்ல ஜீவா அதிர்ச்சியடைவதோடு தன்னுடைய நிலையை நினைத்து வருத்தமடைகின்றார்.


பின்னர் அடுத்த நாள் காலையில் கதிர் முல்லைக்கு ஒரு ஜிமிக்கி வாங்கிக் கொடுக்கிறார். இதைப் பார்த்த கண்ணன் கதிரை நக்கலடிக்கிறார். பின்னர் அங்கு வரும் ஜீவாவிடம் கதிர் முல்லைக்கு ஜிமிக்கி வாங்கிக் கொடுத்த விடயத்தைக் கூறுகின்றார். அப்போது ஜுவா காசு எப்படி வந்தீச்சு என்று கேட்கும் போது சேர்த்து வைத்தது தான் என்று சொல்கின்றார். கதிர் செய்த செயலைப் பார்த்தும் ஜீவா அதிர்ச்சியடைகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement