• Sep 21 2024

ஜீவாவை திடீரென மாட்டி விட்டுக் கிளம்பிய மீனா- கதிர் எடுத்த திடீர் முடிவு- கவலையில் இருக்கும் கண்ணன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொணடிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்தத வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என் பார்ப்போம்.

தனம் ,முல்லை,மூவரும் திருச்சிக்கு போவதற்கு மூர்த்தி ஓகெ சொன்னதால் மூவரும் சந்தோசமாக இருக்கின்றனர். அப்போது முல்லையின் அம்மா உனக்கு பதிலாக நான் போ் வாறேன். நானும் குழந்தையை பார்த்துப்பேன் தானே என்று சொல்ல மீனா அதுவும் சரி தான் ஆனால் நான் போனால் எல்லாத்தையும் பார்த்துப்பேன். எங்கையாவது வெளில போகனும் என்றால் கூட போய்ட்டு வருவேன் என்று சமாளிக்கின்றார்.


பின்னர் வெளில வந்து புலம்பிக் கொண்டிருக்க அங்கு முல்லையும் தனமும் வந்து என்ன ஆச்சு என்று கேட்க எத்தினை பேரைத் தான் சமாளிக்கிறது. என்னால முடியலப்பா நான் வீட்டுக்கு போறேன் இதில இருக்கிற திருச்சிக்கு போய்ட்டு வாறதுக்கு எத்தினை கேள்வி கேட்கிறாங்க என்று சொல்ல தனம் என்னால தானே உங்க ரெண்டு பேருக்கும் கஷ்டம் என்று சொல்ல மீனா அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று சமாளிக்கின்றார்.

பின்னர் ஹொட்டலில் கதிரும் ஜீவாவும் தனம் திருச்சிக்கு போறதில ஏதோ ரகசியம் இருக்கு, அவங்க மூன்று பேருடைய நடவடிக்கைகளும் சரியில்லை என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் கண்ணன் வர அவரையும் அழைத்துப் பேசுகின்றனர். அப்போது கண்ணன் தனக்கு குற்ற உணர்வாவே இருக்கு என்று கவலைப்படுகின்றார்.

இதனால் ஜீவாவும் கதிரும் ஆறுதல்ப்படுத்துகின்றனர்.உனக்கு மறுபடியும் வேலை கிடைச்சிருச்சு என்றால் இதெல்லாம் சீக்கிரமாவே எல்லோரும் மறந்திடுவாங்க என்று சொல்கின்றனர்.பின்னர் வீட்டுக்கு வந்த கதிர் முல்லையிடம் எக்ஸ்சாமுக்காக போறது நல்லம் தான் ஆனால் எனக்கு உன்னை பார்க்கனும் போல இருக்கு என்றால் ஓடி வந்திடுவேன் என்று சொல்கின்றார்.


இதனால் முல்லை என்ன செய்வதென்று யோசிக்கின்றார். இருந்தாலும் தானும் கதிரைப் பார்க்காமல் இருக்கப்போவதை நினைத்து கவலைப்படுகின்றார். மறுபுறம் மீனா திருச்சிக்கு போறதை அறிந்த மீனாவின் அம்மாவும் அப்பாவும் கயலை விட்டிட்டு போகப்போறியா என்று கேட்க மீனா சமாளித்து விட்டு அங்கிருந்து கிளம்புவதோடு எது என்றாலும் ஜீவா கிட்ட கேளுங்க என்று கூறிவிட்டு செல்கின்றார். இதனால் ஜீவாவும் இந்த முறை மட்டும் போய்ட்டு வரட்டும் என்று சமாளிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement