சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான எபிசோட் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த தொடருக்கு அநேகமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறித்த சீரியல், பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற பல விஷயங்கள் தொடர்பில் விழிப்புணர்பு ஏற்படுத்தும் விதமாக காணப்படுகிறது. இதன் காரணமாகவே அதற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
அதன்படி, குணசேகரனை தீடிரென்று பொலிஸார் அரெஸ்ட் செய்து சென்ற நிலையில், மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு குணசேகரன் வர விசாலாட்சி, கதிர் மற்றும் ஞானம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், தனது 40 சதவீத பங்கு சொத்தை யாருக்கு கொடுக்கப்போகிறேன் என்பதனை விரைவில் நடக்க இருக்கும் பங்ஷனில் கூறுவதாக அப்பத்தா சொல்ல, அனைவரும் பங்க்ஷனில் கலந்து கொள்வதற்காக ஆர்வமுடன் உள்ளனர்.
அதே சமயம் எப்படியாவது அப்பத்தாவை போட்டு தள்ள வேண்டும் என்று கதிர் பல முயற்சிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், ஜனனி, நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி மற்றும் ஜான்சி ராணி அனைவரும் ஒரே காரில் செல்கின்றனர். அதேவேளை ஜான்சிராணியை காரில் இருந்து இறக்கிவிட்டு அனைவரும் வேகமாக காரில் பார்க்கின்றனர். இத பார்த்த ஜான்சி ராணி கார் பின்னாடியே ஓடிவாரத நாம பார்த்திருப்போம்.
இதனை அடுத்து, காரில் தன்னை இறக்கி விட்டு ஓடிய மருமகள்களை பார்த்து 'ஏய் இது எங்க அண்ணனோட காரு நீங்க எல்லாம் இறங்குங்கடி' என மருமகள்கள் அனைவரையும் கடுப்பாக்குகிறார் ஜான்சி ராணி.
அதேவேளை, கதிர், ஞானம், கரிகாலன் மற்றும் கில்லி ஆகியோர்கள் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இதன்போது, 'நீ தேவையில்லாத வேலை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க' என்றுகதிருக்கு கில்லி கூற, அதற்கு 'எது தேவ எது தேவை இல்லைன்னு எனக்கு தெரியும் நான் சொன்னது மட்டும் செய்' என்று சொல்கிறார் கில்லி.
மறுபுறம், நந்தினி அப்பா வீட்டுக்கு வந்து அப்பத்தா வர சொன்னதாக சொல்ல குணசேகரன் அவங்க சொன்னா வந்துடுவீங்களா?சரி வாங்க அங்க நடக்கிறதை நீங்களும் பார்க்கணும் என ஷாக் கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!