பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ளது. ஏற்கனவே பழைய ஹவுஸ்மேட்ஸ் உள்ளே வந்திருந்த நிலையில் இன்று ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர்.
அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஃபைனலிஸ்ட் 6 பேரில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் எனவும் நேரம் ஆக, பணமூட்டையில் இருக்கும் பணமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் கார்டன் பகுதியில் தொங்கிய பண மூட்டையை கதிர் அறுக்க முயற்சிக்க, போட்டியாளர்கள் அனைவரும் வேண்டாம் என பதறியபடி அருகில் சென்றனர்.ஆனாலும் கதிர் பண மூட்டையை கட் செய்யவே அனைவரும் இன்னும் காத்திருந்திருக்கலாம் என கதிரிடம் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.
— Unnaipol Oruvan (@Unnaipol7Oruvan) January 17, 2023
இருப்பினும் பணத்திற்காக தான் இந்த முடிவை எடுக்கவில்லை எனவும் கதிர் கூறியிருந்தார். இதனையடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் கதிர் தெரிவிக்கிறார். அப்போது ஆயிஷாவிடம் சாரி கேட்ட கதிரவன் அவர் வந்ததிலிருந்து ஒருநாள் கூட பிக்பாஸ் வீட்டில் தங்க முடியாமல் போய்விட்டதாக கூறுகிறார். தொடர்ந்து பேசும் கதிர் வெளியே வந்தவுடன் சந்திக்கும்படியும் ஆயிஷாவிடம் கூறுகிறார்.
பின்னர் அருகில் இருந்த ஷிவினிடம் பேசும் கதிர் அவரிடம் போட்டிக்காக வாழ்த்து சொல்கிறார். அப்போது, கதிர் கைகொடுக்க, ஷிவின் கைகொடுக்க மறுத்துவிடுகிறார். பதிலுக்கு கைகூப்பி கதிருக்கு ஷிவின் வணக்கம் சொல்ல, கதிர் புன்னகைத்தபடியே அங்கிருந்து செல்கின்றார். இதனை சக போட்டியாளர்கள் கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
Listen News!