பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளதால் பிக்பாஸ் வீடானது கலகலப்பாக மாறியுள்ளது. இதனடிப்படையில் நேற்றைய தினம் ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஃபைனலிஸ்ட் 6 பேரில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் எனவும் நேரம் ஆக, பணமூட்டையில் இருக்கும் பணமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் கார்டன் பகுதியில் தொங்கிய பண மூட்டையை கதிர் அறுக்க முயற்சிக்க, போட்டியாளர்கள் அனைவரும் வேண்டாம் என பதறியபடி அருகில் சென்றனர்.ஆனாலும் கதிர் பண மூட்டையை கட் செய்யவே அனைவரும் இன்னும் காத்திருந்திருக்கலாம் என கதிரிடம் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் பணத்திற்காக தான் இந்த முடிவை எடுக்கவில்லை எனவும் கதிர் கூறியிருந்தார். அதன் பிறகு அசீம், மைனா ஆகியோருடன் கதிர் பேசுகிறார். அப்போது அஸீமிடம் அவர்,"நிறைய Fun லாம் வரும். பார்த்துட்டு வா" என்கிறார். அதன்பின்னர் மைனாவிடம்,"இதுதான் வெற்றி. போகும்போது அனுப்ப மக்களுக்கு மனசு இல்ல. வெளியே அனுப்பவும் மக்களுக்கு ஏத்துக்க மனசு இல்ல. அப்போ புரியவச்சிட வேண்டியதுதான். ஸ்போர்ட்டிவ்நெஸ், பெரிய விஷயத்தை விட்டுக்கொடுத்துறது. இதை வாழ்க்கையில சில நேரம் மிஸ் பண்ணிடுறோம்" என்றபடி சிரிக்கிறார். இதனை கவலைபடிந்த முகத்துடன் போட்டியாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
Listen News!