• Sep 21 2024

முருகனுக்கு காவடி எடுத்த ரோஜா..வைரலாகும் புகைப்படங்கள்...இவ்வளவு எளிமையாக இருக்கின்றாரே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ரோஜா. திரையுலகில் நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய இவர் அரசியலில் பல்வேறு தடைகளை கடந்து இன்று சிங்கப்பெண்ணாய் ஆந்திர அமைச்சரவையில் அமர்ந்திருக்கின்றார். அதாவது தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.

ரோஜாவிற்கு ஆரம்பத்தில் சினிமாவில் ஆர்வம் இருக்கவில்லை. தனது தந்தையின் விருப்பத்தினாலே சினிமாவிற்குள் நுழைந்தார். இவரது அறிமுகப் படமாக அமைந்திருந்தது 'பிரேமா தபாசு' என்கிற தெலுங்கு படம் தான். எனினும் இப்படம் இவரிற்கு வெற்றிக்குப் பதிலாக தோல்வியையே பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் 'செம்பருத்தி' படத்தில் பிரசாந்த்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார் ரோஜா.

இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை ரோஜாவிற்கும் இப்படத்தின் இயக்குநரான ஆர்.கே.செல்வமணிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அத்தோடு இவர்களது நல்வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஒரு மகனும் மகளும் இவர்களுக்கு உள்ளனர். இவ்வாறாக குடும்ப வாழ்க்கையில் சந்தோசமாக இருந்து வரும் நடிகை ரோஜா அரசியலிலும் கலக்கி வருகின்றார்.

இந்த நிலையில் ரோஜா ஆடி கிருத்திகை தினமான நேற்று தனது குடும்பத்தினருடன் இணைந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார். அக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வந்திருந்த சமயத்தில் மக்களோடு மக்களாக காவடி எடுத்தபடி நடந்து வந்திருக்கின்றார் நடிகை ரோஜா. அதுமட்டுமன்றி தனது வேண்டுதலையும் சிறப்பாக நிறைவேற்றினார்.

வேண்டுதலை தொடங்குவதற்கு முன்னதாக நடிகை ரோஜாவுக்கு கோவில் நிர்வாகத்தினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. புடைவை அணிந்து 'அரோகர' என பக்திப் பரவசமாக கோஷமிட்டபடி தனது மகன் மற்றும் கணவருடன் கோவிலுக்கு சென்ற ரோஜாவை பார்த்த பக்தர்கள் இவ்வளவு எளிமையாக இருக்கின்றாரே என ஆச்சரியமாகப் பார்த்தனர்.

பின்னர் அங்கு வந்தவர்களிடம் பேசுகையில் "நான் திருத்தணி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து வருகிறேன், எனது தொகுதி மக்களுக்காகவும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி தொடர்ந்து சிறப்பாக நடக்கவும் முருகன் அருள் புரிய வேண்டும்" என வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார். இவர் முருகனைத் தரிசித்த அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி மக்கள் செம வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement