• Sep 20 2024

நிவின் மீது காதல் வயப்படும் காவேரி மற்றும் யமுனா- இனி நிகழப்போவது என்ன?- வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிரவீன் பென்னட் இயக்கத்தில் தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் மகாநதி.தந்தையை இழந்து நான்கு பெண் பிள்ளைகள் தாயுடன் தனியாக வாழும்போது என்னென்ன போராட்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சீரியலே மகாநதி.

இந்த சீரியலில் தற்பொழுது குமரன் தன்னுடைய மனைவி மற்றும் யமுனா, காவேரி நர்மதா, நிவின் எல்லோரையும் கூட்டிக் கொண்டு சென்னைக்கு ஹனிமூனுக்குச் சென்றுள்ளார்.

அங்கே யமுனா சோகமாக இருக்க நிவின் அட்வைஸ்ட் பண்ணுகின்றார். இதனை கேட்டுக் கொண்டிருந்த காவேரி நிவின் மீது காதல் வயப்படுகின்றார். நிவினின் வார்த்தைகளால் யமுனாவும் நிவின் மீது ஆசைப்படுகின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement