• Sep 20 2024

கங்காவிடம் நடந்ததை சொல்லி கதறி அழும் காவேரி - நிவினிடன் நியாயம் கேட்கும் யமுனா..!பரபரப்புடன் வெளியான ''மகாநதி'' ப்ரோமோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. தந்தையை இழந்து வாழும் நான்கு பெண் பிள்ளைகள் தமது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இதில் காவேரியும் நிவினும் காதலிக்கும் விஷயம் தெரிந்ததால் நிவினுக்கும் அவரது மாமன் பொண்ணு ராகினிக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துவிட்டனர்.

நிவின் ஊருக்கு போய்விட்டதாக நினைக்கும் காவேரியிடம் குமரன் நிவின் எங்களை ஏமாத்திட்டு ராகினியை நிச்சயம் பண்ணிட்டு இருக்கிறான் என்று சொல்லி ராகினியை அழைத்துச் செல்கின்றார். மணமேடையில் நிவினையும் ராகினியையும் பார்த்த காவேரி கதறி அழுகின்றார்.

அந்தவகையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.அந்த ப்ரோமோவில் காவேரி தனது அக்காவான கங்காவை கட்டிப்பிடித்து கதறி அழுகிறர்.என்னாச்சுன்னு சொல்லுங்க என்று கங்கா கேட்க 'ராகினிக்கும்,நிவினுக்கும் நிச்சியரத்தம் நடந்து முடிஞ்சிட்டு என்று குமரன் சொல்ல கங்கா ஷாக் ஆகிறார்.என்னை எமாத்திட்டான் அக்கா என கதறி அழுகிறார் காவேரி.

இதனை கேட்டு யமுனா ,நிவினிடன் அழுதபடியே ஒடி சென்று நியாயம் கேட்கிறார் .

''நிச்சியர்த்தம் தான் நடந்திச்சு கலியாணம் கண்டிப்பா நடக்காது என நிவின் கூற ,எனக்காக இவர் கண்டிப்பா கலியாணத்தை நிறுத்திடுவாரா என யமுனா மனசுக்குள் தன்னை தானே ககேள்வி கேட்பாதக அந்த ப்ரோமோ அமைந்துள்ளது.

எனவே என்ன நடக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement