விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் நிவினுக்கும் தனது மகளுக்கும் திருமணத்தை பசுபதி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதனை காவேரியின் அப்பாவை ஏமாற்றி வாங்கிய தோட்டத்தில் தான் செய்கின்றார்.
மேலும் நிவின் தாலி கட்டப்போகும் சமயத்தில் காவேரி போலீஸ் மற்றும் தோட்டத்தில் வேலை செய்தவருடன் சேர்ந்து போகின்றார். அப்போது பசுபதி என்ன கல்யாணத்தை நிறுத்த வந்திருக்கிறியா என்று கேட்க எல்லாத் தப்பையும் பண்ணிட்டு கல்யாணமா என்று கேட்கின்றார்.
அப்போது பசுபதி ஆதாரம் இருக்கா என்று கேட்க, காவேரி தோட்டத்தில் வேலை செய்தவரைக் கூட்டிக் கொண்டு வருகின்றார். இதைப் பார்த்து பசுபதி அதிர்ச்சியடைந்ததோடு போலீஸ் அவரைக் கைது செய்கின்றனர். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.
Listen News!