• Sep 20 2024

பிறந்தநாள் பரிசாக பார்த்திபனிடம் விவாகரத்து கேட்ட காவ்யா- எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஈரமான ரோஜாவே சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று மக்கள் மத்தியில் தனி வரவேற்புக் காணப்படுகின்றது.அவற்றில் முதன்மையான சீரியலாக ஈரமான ரோஜாவே சீரியல் திகழ்கிறது. இதுவரை ஈரமான ரோஜாவே சீரியல் முதல் சீசன் பல்வேறு பார்வையாளர்களிடையே பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பும் உண்டு பண்ணியது. இதனை தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிறது.

இதில் அண்ணன் - தம்பி இருவரும் அக்கா தங்கைகளை திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இதில் காவ்யா விரும்பியது தன் கணவரின் தம்பியைதான்.  எனினும் விரும்பிய வாழ்க்கையை விட அமைந்த வாழ்க்கையை எப்படி ஏற்று வாழ்கிறார்கள் என்பதே கதை. தான் விரும்பியவருடைய அண்ணனைதான் காவ்யா திருமணம் கொண்டார்.


அவருடைய காதலரோ, தன் அண்ணன் திருமணம் செய்ய வேண்டிய பெண்ணை  திருமணம் செய்துகொண்டார். இப்படி இரண்டு ஜோடிகளும் மனம் மாறி ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.  இதனிடையே ஜீவா, பிரியா மற்றும் பார்த்திபன், காவ்யா ஜோடிகள் இப்போது ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள தொடங்க, இன்னொரு பக்கம், பார்த்தியின் தாயார் காவியாவை வெளியேற்ற பல விஷயங்களை செய்து வருகிறார்.


இதற்குக் காரணம் காவ்யா இதற்கு முன்பாக யாரையோ காதலித்து விட்டதாக பார்த்தியின் அம்மாவுக்கு தெரிந்து விட்டதுதான். தன் மகன் பார்த்தியின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்பதற்காக காவ்யா, பார்த்தியின் வாழ்க்கையை விட்டு விலகிச் சென்று விட வேண்டும் என்று பார்த்தியின் அம்மா நினைப்பது மட்டுமல்லாமல் அதற்கான காயையும் நகர்த்துகிறார். இதன் நிமித்தமாக பார்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு காவ்யா ஒரு பக்கம் முயற்சித்து வந்தார். அதே சமயம் பார்த்தியின் அதீத அன்பும் காவ்யாவை நெகிழவும் நிலை குலையவும் வைத்தது.


இருப்பினும் கனத்த இதயத்துடன் காவ்யா பார்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட , பார்த்தியின் அம்மாவின் காய் நகர்த்தலால் அது இக்கட்டான சூழ்நிலைக்கு வந்துவிட்டது. இதனால் உடைந்து அழும் பார்த்தி, காவ்யாவின் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடவும் தயாராகி விட்டார். அதற்கு முன்பாக உடைந்து அழுகிறார்.இது தொடர்பான புரோமோக்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதை பார்த்துக் கொண்டிருந்த ஜீவா மிகவும் குற்றவுணர்வுடன், காவ்யாவிற்கு எந்த நிலையிலும் உதவி செய்ய முடியாமல் இருக்கிறார். தொடர்ந்து இந்த சீரியலை எப்படி எடுத்துச் செல்ல போகிறார்கள் என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement