விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே சீசன் 2. மேலும் இந்தத் தொடரின் முதல் சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசனும் பரபரப்பான எபிசோட்களை தந்து வருகிறது. திருமணத்தின்போது ப்ரியா கடத்தப்பட, ஜோடி மாறி திருமணம் நடைபெறுகிறது. எனினும் இதையடுத்து ஒருவரையொருவர் காதலித்து வந்த ஜீவா மற்றும் காவ்யா, ப்ரியா மற்றும் பார்த்தியுடன் மனதளவில் ஒன்ற முடியாமல் தவிப்பதாக காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறுஇருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீவா மற்றும் பார்த்தியின் பெற்றோருக்கு 60ம் கல்யாணம் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த தன்னுடைய மாமனாரின் நண்பர், தன்னையும் ஜீவாவையும் ஹோட்டல் அறையில் வைத்து பார்த்து அட்வைஸ் செய்த நபர் என்பதை காணும் காவ்யா, கோயிலில் இருந்து வெளியேறுகிறார். மேலும் அவர் தன்னுடைய மாமியாரிடம் உண்மையை கூறிவிட்டுத்தான் செல்கிறார். ஆனால் இவ்வாறு தன்னுடைய மகனுக்கு காவ்யா துரோகம் செய்ததை நினைத்து அவர் அதை யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார்.
காவ்யா தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற தாலியையும் அவர் மறைத்த நிலையில், காவ்யா மீது ஒட்டுமொத்த குடும்பமும் கோபம் கொள்கிறது. திருமணமும் நிற்கிறது.எனினும் இதையடுத்து காவ்யா வீட்டிற்கு வர, அவரிடம் குடும்பத்தினரின் கோபம் எதிரொலிக்கிறது. மேலும் அவர் தனது நிலையை கூறக்கூட வாய்ப்பு தராமல், பார்த்தி, காவ்யா முன்னதாக கேட்ட விவாகரத்தை கொடுக்கிறார்.
இந்நிலையில் சூப்பராக ஒரு ப்ரமோ வெளிவந்துள்ளது. உண்மைகளை அறிந்த பார்த்தீபன் பஸ்ஸை நிறுத்துங்கள் என காவ்யாவை பார்க்க ஓடி வருகின்றார்.எனக்கு இப்ப தான் எல்லா உண்மைகளும் தெரிஞ்சுது வா என்னுடன் எனக் கூற அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் காவ்யா.
பின் பஸ்ஸில் இருந்த அனைவரும் பார்த்திபனை அடித்து கீழெ தள்ளிவிடுகின்றார்கள்.அதன் பின் பார்த்திபன் பஸ்ஸை மறித்து கீழே உட்கார்ந்து விடுகிறார்.போக மாட்டேன் போக மாட்டேன் எனக் கூற காவ்யா பளார் என ஒரு அறையை விட ...திடீரென காவ்யா என கத்திவிட்டு காலில் விழுந்து விடுகின்றார்.பின் இருவரும் செல்ல சண்டை போட்டு சிரித்து கொள்கின்றார்கள்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!